lundi 22 août 2016

ஒன்றில் இரண்டு!



ஒன்றில் இரண்டு
(ஒரே பாடலை இரண்டாகப் பகிர்தல்)
கலிவிருத்தம்!

அருந்தமிழ் மின்னும் அழகுடை ஆக்கம்!
பெருந்புகழ் ஈட்டும்! பழச்சுவை பேணும்!
வருந்துயர் போக்கும்! வழிந்திடும் இன்பம்!
தருங்கவி யாவும் தழைத்திடும் வாழ்வே!

வஞ்சித் துறை 1

அருந்தமிழ் மின்னும்
பெருந்புகழ் ஈட்டும்!
வருந்துயர் போக்கும்!
தருங்கவி யாவும்!

வஞ்சித் துறை 1

அழகுடை ஆக்கம்!
பழச்சுவை பேணும்!
வழிந்திடும் இன்பம்!
தழைத்திடும் வாழ்வே!

இலக்கணக் குறிப்பு
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே இரண்டு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தரவேண்டும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016

2 commentaires:

  1. அருமையான பா வரிகள்
    தொடருங்கள்
    தொடருவோம்

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கம் தொடருகிறேன் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer