dimanche 1 janvier 2017

கேட்டலும் கிளத்தலும்

கேட்டலும் கிளத்தலும்
  
இங்குச் சென்றான், இங்கு சென்றான் எது சரியென்பதை இலக்கியச் சான்றுடன் விளக்கம் தருக
  
இளமதி, சர்மனி
-----------------------------------------------------------------------------------
  
இங்குச் சென்றான் என்பதே சரி. ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின் முன் வல்லினம் மிகும்.
  
அங்குக் கண்டேன்
ஆங்குக்கண்டேன்
இங்குச்சென்றேன்
ஈங்குச்சென்றேன்
உங்குத்தந்தான்
ஊங்குத்தந்தான்
எங்குப் பெற்றான்
யாங்குப்பெற்றான்
யாண்டுப்பெற்றான்
    
வெங்கண்திண் களிறடர்த்தாய்
   விற்றுவக்கோட் டம்மானே!
எங்குப்போய் உய்கேனுன்
   இணையடியே அடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா
   தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
   மாப்பறவை போன்றேனே!
         [நாலாயிரம். பெருமாள் திருமொழி, 692]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2017

1 commentaire:

  1. அருமையான விளக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    RépondreSupprimer