samedi 23 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 3


சித்திர கவிதை

[வெண்டளைக் கலிவிருத்தம்!]
  
கம்பன் வாழி!
  
சந்தம் கமழ்ந்திடும் கம்பன் தமிழாம்!
சொந்தமும் சூழ்ந்திடும் தோழா..நீ வா..கற்போம்!
முந்தும்பண் இன்பிடும்! நம்மொழி நாம்காக்க!
கந்திகமழ் சொக்கா! முழுதெம் இனம்வாழ்க!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'டு' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'கம்பன் வாழி' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் ஒவ்வொரு அடியும் 19 எழுத்துகளைப் பெறும். மொத்தம் 76 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் 22.12.2017
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம் - 3

Aucun commentaire:

Enregistrer un commentaire